யேகோவா சகார்
Jehovah Zakar
பொருள்: நம்மை நினைவு கூரும் தேவன்
God who remembers
"தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தான் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்."
யாத்திராகமம் 2:24
(சகார் - நினைவுக் கூறுவதைக் குறிக்கும். "சகரியா" என்ற வேதாகமப் பெயர் தேவன் தனது மக்களையும் வாக்குத்தத்தங்களையும் மறவாதவர் என்பதைக் குறிக்கிறது.)
தேவன் மறக்கும் ஒரே காரியம், நம் பாவங்கள் மட்டுமே. பாவ மன்னிப்பு அளித்தப்பின், அவர் நம் பாவங்களை ஞயாபகம் வைத்திருப்பதில்லை என்று உறுதியளிக்கிறார்.
"நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன், உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்."
ஏசாயா 43:25
சிட்டுக்குருவிகளையும் எறும்புகளையும் கூட நினைவில் வைத்து, அவற்றுக்கான தேவைகளை சந்திக்கும் தேவனுக்கு நாம் எவ்வளவு சிறப்பாக இருக்க வேண்டும்! மனிதர்களாகிய நாம் வயதாகும்போது பல விஷயங்களை மறந்துவிடுகிறோம். ஆனால் தேவன் ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால், 400 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் அதை நினைவுக்கூறுகிறார்! ஆம், அவர் சொன்னதை செய்யும் தேவன்! அவர் நோவாவையும் அவன் குடும்பத்தையும் நினைவு கூர்ந்து, பேழையைத் திறந்தார். அவர் சாராள், ரெபேக்காள், ராகேல் மற்றும் அன்னாளையும் நினைவு கூர்ந்து, அவர்களின் கர்பத்தைத் திறந்தார். அவர் இஸ்ரவேல் ஜனங்களை நினைவு கூர்ந்து, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். அவர் நிச்சயமாக உங்களையும் நினைவு கூர்ந்து ஆசீர்வதிப்பார்.
"ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்."
சங்கீதம் 105:8,9
சாலமோன் ராஜா வாலிபர்களுக்கு அவர்களின் நினைவில் தேவனை வைத்துக் கொள்ளுமாறும், உலகின் இன்பங்களுக்குப் பின்னால் ஓட வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்.
"நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை..."
பிரசங்கி 12:1
[Strong's concordance:
2142. zakar - remember]