யேகோவா சாலி / யேகோவா சூரி
Jehovah Sali / Jehovah Tsuri
பொருள்: கர்த்தரே என் கன்மலை
God is my rock
"கர்த்தர் என் கன்மலை" என்ற வாக்கியம் தேவனுடைய பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு உவமை. இது சங்கீதம் 18:2 இல் தாவீது இஸ்ரவேலின் ராஜாவான பிறகு எழுதியதாகக் கருதப்படுகிறது.
ஒரு கன்மலை திடமானது, நிலையானது மற்றும் வலுவானது. அதை உடைக்க பலத்த சக்தி தேவைப்படுகிறது. பண்டைய காலங்களில், மக்கள் பாதுகாப்புக்காக குகைகளிலும் குன்றுகளிலும் தஞ்சம் புகுந்தனர். பல சமயங்களில் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளது. இஸ்ரவேலர்களின் தாகத்தைத் தணிக்க தேவன் ஒரு கன்மலையிலிருந்து தான் தண்ணீரைக் கொடுத்தார்.
பலிபீடங்கள், ஆலயங்கள், வீடுகள் மற்றும் நகரச் சுவர்களைக் கட்ட கன்மலைகளின் பாறைகள் பயன்படுத்தப்பட்டன. இஸ்ரவேலின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூர கற்களின் குவியல்களும் பயன்படுத்தப்பட்டன. அனைத்து தலைமுறைகளும் தேவனுடைய சட்டத்தை அறிந்து கொள்ள, மோசேக்கு வழங்கப்பட்ட பத்து கட்டளைகள் கல்லில்தான் பொறிக்கப்பட்டுள்ளன. “கன்மலை” என்ற வார்த்தை தேவனுடைய நீடித்த விசுவாசத்தை எடுத்துக்காட்டுகிறது.
சங்கீதம் 19:14 இல் தாவீது இவ்வாறு பாடுகிறார்: "என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக."
தாவீது சவுலால் பின்தொடரப்பட்டபோது, தேவனை தனது கன்மலையாகவும் மீட்பராகவும் அங்கீகரித்தார். தேவன் தாவீதை சவுலிடமிருந்து பாதுகாத்தார். தாவீது அவரைப் பின்தொடர்ந்த சவுலின் வீரர்களிடமிருந்து தப்பிக்க கன்மலைகள் மற்றும் குகைகளில் அடிக்கடி ஒளிந்து கொண்டார்.
அதேப்போல், யேகோவா சாலி நம்மை எதிரியின் கைகளில் இருந்து மீட்டு, உபத்திரவத்தின் போது நாம் தஞ்சம் அடையக்கூடிய கன்மலையாக இருக்கிறார்.
"கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை. உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை. எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை."
1 சாமுவேல் 2:2
[Strong's concordance:
5553. sela - a crag, cliff
6697. tsur - rock, cliff]
No comments:
Post a Comment