யேகோவா யிக் பெ-கிர்பெக்
Jehovah Yik B'kirbekh
பொருள்: நம் நடுவில் இருக்கும் தேவன்
Lord God in our midst
செப்பனியா 3:17
இந்த வசனம் தேவன் எப்போதும் நம்முடன் இருக்க விரும்புகிறார் என்பதை விளக்குகிறது. ஆதாம் ஏவாள் தொடங்கி, இன்று வரை தேவன் அநேக மனிதர்களுடன் உறவாடவே விரும்புகிறார்.
"தேவன் (எருசலேமின்) நடுவில் இருக்கிறார், அது அசையாது, அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்."
சங்கீதம் 46:5
மாற்கு 4:35–41 இல், இயேசுவும் அவருடைய சீஷர்களும் கலிலேயா கடலில் பயணித்தபோது பலத்த சுழல்காற்று உண்டானது. அவர்கள் மிகவும் பயந்து, இயேசுவை எழுப்பி, அவர் எப்படி இந்நேரத்தில் கவலையில்லாமல் தூங்க முடியும் என்றனர். காற்றையும் கடலையும் அமைதிப்படுத்திய பிறகு, இயேசு சீஷர்களின் அவிசுவாசத்தை கண்டித்தார்.
எப்படி மூழ்க முடியும்? அவர்கள் ஏன் அஞ்சினார்கள்? அவர்களுடன் படகில் தேவனே இருந்தாரே! தேவன் இருக்கும் வரை படகு மூழ்காது. இயேசு அவர்கள் நடுவே இருக்கும்போது அவர்கள் எதற்கும் பயந்திருக்கக் கூடாது அல்லவா...?
நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட தருணத்திலிருந்து, அவர் உங்கள் மத்தியில் இருக்கிறார். நீங்கள் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும்போது பிதா, குமாரன், ஆவியானவராகிய திரித்துவ தேவன் உங்களுக்குள் வாசம் செய்கிறார். நீங்களும் உங்கள் குடும்பமும் தேவனுடைய பிரசன்னத்தை எப்போதும் அனுபவிப்பீர்கள். குடும்பமாக, நாம் வேதாகமத்தைப் படித்து, தேவனுடைய வழியில் நடக்கும்போது, இயேசு மகிழ்ச்சியடைந்து அவர் நம் வீட்டில் வாசம் செய்வார். உண்மையிலும் ஆவியிலும் ஜெபிக்கும்போது கர்த்தர் நம் நடுவே இருப்பார், பெரிய காரியங்களை நமக்கு வெளிப்படுத்துவார். அவர் நம்முடன் இருக்க நாம் எதற்கும் பயப்பட வேண்டாம். எந்நேரமும் நமக்குள் வாழும் பரிசுத்த ஆவியை நாம் துக்கப்படுத்தக்கூடாது. (எபே 4:30).
"சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்."
சகரியா 2:10
[Strong's concordance:
7130. qereb - inward part, midst]
No comments:
Post a Comment