யேகோவா ஷிட்கேனு
Jehovah Tsidkenu
பொருள்: "நமது நீதியாயிருக்கிற கர்த்தர்"
God is our righteousness
"அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும், அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே."
- எரேமியா 23:6
சரியானதைச் செய்வதே "நீதி" எனப்படும். தேவன் எப்போதும் சரியானதைச் செய்வார் என்ற உண்மையைப் பற்றி இந்த நாமம் பேசுகிறது, ஏனென்றால் அவர் நீதியுள்ளவர்! எந்த மனிதனும் தேவனைப் போல் நீதியுள்ளவனாக இருக்க முடியாது. நமக்கு எந்த நீதியும் இல்லை என்பதை வேதம் தெளிவாக கூறுகிறது. நமக்கு நீதி இல்லை என்பது மட்டுமல்லாமல், நம்முடைய சொந்த முயற்சியால் நீதியை அடைவதும் சாத்தியமில்லை. இயேசு கிறிஸ்து மட்டுமே நம்முடைய நீதியின் ஒரே ஆதாரம். அப்போஸ்தலன் பவுல் ரோமர் 3:10 இல் "அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை..." என்று எழுதுகிறார்.
உலகில் நாம் நீதியுள்ளவர்களாக இருக்க முயன்றாலும் நாம் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம், நம்முடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது. (ஏசாயா 64:6)
இயேசுவே நம்முடைய ஷிட்கேனு. இயேசு தன்னை தேவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் தன்னுடைய நீதியைத் தருகிறார். ஆதாமுடைய மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, இயேசு கிறிஸ்துவின் ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
இந்த செய்தியைப் படிக்கும்போது அவருடைய இரத்தம் உங்கள் பாவங்களை மூடி உங்களை சுத்தம் செய்யட்டும். ஆமென்!
"நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்."
2 கொரிந்தியர் 5:21
[Strong's Concordance:
6664. tsedeq - "tseh'-dek", from which "Tsidkenu" derived, means "to be stiff," "to be straight," or "righteous" in Hebrew.]
No comments:
Post a Comment