மகா பிரதான ஆசாரியர்
Great High Priest
Greek: Megan archierea
எபிரேயருக்கு எழுதின நிரூபத்தில், இயேசு "மகா பிரதான ஆசாரியர்" என்று அழைக்கப்படுகிறார் (எபி 2:17; 4:14).
"மெல்கிசேதேக்கு" என்பவர் ஆதியாகமம் 14-இல் அறிமுகப்படுத்தப்பட்டவர். அவர் சாலேமின் ராஜாவாகவும் ஆசாரியராகவும் இருந்தார் என்று கூறப்படுகிறது. மெல்கிசேதேக்கு ஆபிராமை ஆசீர்வதித்தார். ஆபிராம் அவருக்கு எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார், இதனால் மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தையும் அதிகாரத்தையும் உறுதிப்படுத்தமுடியும். அவர்கள் ஆபிரகாமின் காலத்திற்கு முன்பே மெய்யான தேவனை வணங்கினார்கள். சிலர் யோபுவும் எத்திரோவும் மெல்கிசேதேக்கைப் போன்றவர்கள் என்று நம்புகிறார்கள், அவர்கள் நியாயப்பிரமாணம்
எழுதப்படுவதற்கு முன்பே தேவனுக்கு பலியிட்டார்கள். இயேசு இந்த ஆசாரியர்களின் வரிசையைச் சேர்ந்தவர் என்று வேதம் கூறுகிறது – அவர் மாம்ச சம்பந்தமான நியாயப்பிரமாணத்தின்படி அல்லாமல், அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
இஸ்ரவேலில், பாவ நிவிர்த்தி நாளில் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையத்தக்கவர் பிரதான ஆசாரியர் ["Kohen Gadol": "கொஹென் கடோல்"] மட்டுமே. அவர் மட்டும்தான் உள்ளே நுழைந்து தன் பாவத்திற்காக பலி செலுத்த முடியும். அதற்குப்பின்பு தான் அவர் மற்ற ஜனங்ளுக்கு சுத்திகரிப்பின் பலிகளை வழங்க முடியும். (லேவி 16)
இயேசு ஒரு பிரதான ஆசாரியராக, நமக்காக தேவனிடம் மத்தியஸ்தராக செயல்படுகிறார். நமக்கும் தேவனுக்கும் இடையே இருந்த தேவாலயத்தின் திரைச்சீலையைக் கிழித்தார். ஆண்டுதோறும் பாவநிவிர்த்தி செய்வதற்குப் பதிலாக, இயேசு அனைவருக்கும் ஒரே முறை தன்னையே பலியிட்டார். அவர் மற்ற எல்லா ஆசாரியர்களிடமிருந்தும் வேறுபட்டவர்.
"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்."
எபிரேயர் 4:15
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's concordance:
Heb: 3548. kohen - priest
1419. gadol - great
Greek: 749. archiereus - high priest, chief priest.
3173. megas - great]
No comments:
Post a Comment