Monday, October 28, 2024

தாவீதின் வேரும் சந்ததியுமானவர்

தாவீதின் வேரும் சந்ததியுமானவர்

The root and offspring of David
"... நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்."
வெளி 22:16
கர்த்தராகிய இயேசு மனிதனாக பூமிக்கு வருவதற்கு முன்பாகவே தாவீது இயேசுவால் படைக்கப்பட்டார், ஆனால் பிற்பாடு இயேசு அவர் வம்சத்தில் மனிதனாக தோன்றினார். இயேசுவின் தகப்பனாகிய யோசேப்பு, தாவீதின் குமாரனாகிய சாலமோனின் வம்சத்தில் பிறந்தார். மரியாளும், தாவீதின் மற்றொரு மகனாகிய நாத்தானினா வம்சத்தில் பிறந்தார். ஆதலால், இயேசு தாவீதின் சந்ததியாக உலகில் தோன்றினார்.
தாவீது கீழ்வரும் வசனத்தில் இயேசுவை ஆண்டவராக அங்கீகரித்தார்:
"கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்."
சங்கீதம் 110:1
தாவீது இயேசுவுக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தாலும், இயேசு சுவிசேஷங்களில் பல முறை "தாவீதின் குமாரன்" என்று அழைக்கப்படுகிறார். இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்:
• தாவீது ஒரு மேய்ப்பன், இயேசுவும் "நல்ல மேய்ப்பர்" என்று அழைக்கப்படுகிறார்.
• இருவரும் பெத்லகேம் ஊரில் பிறந்தவர்கள்.
• தாவீது 30 வயதில் ராஜாவானார், இயேசு 30 வயதானபோது அவருடைய ஊழியத்தைத் தொடங்கினார்.
• தாவீது கோலியாத்தை வென்றார், இயேசு சாத்தானை ஜெயித்தார்.
• தாவீது கர்த்தருடைய இதயத்திற்கு ஏற்ற ஒரு மனிஷனாக இருந்தார், இயேசு பிதாவின் சித்தத்தையே செய்தார்.
• வெகு நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்த அன்னாளுக்குப் பிறந்த சாமுவேல் தீர்க்கதரிசியால், தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். அதேபோல், வெகு நாட்கள் குழந்தை இல்லாத எலிசபெத்திற்கு பிறந்த யோவான் ஸ்நானகன், இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இப்படி பல ஒற்றுமைகள் உள்ளது.
எருசலேமை தலைநகரமாகக் கொண்டு, தாவீது பல ஆண்டுகள் இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தார். இயேசுவும் "ராஜாதி ராஜன்" என்று அழைக்கப்படுகிறார். புதிய எருசலேமை தலைநகரமாகக் கொண்டு, இயேசு ஆயிரமாண்டு உலகின் ராஜாவாக ஆட்சி செய்வார்.
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's concordance:
Greek
4491. rhiza - root
1085. genos - offspring]

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...