"மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவர்"
THE FIRSTBORN FROM THE DEAD
[Greek: prototokos ek ton nekron]
"...எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்."
இயேசு மரித்தோரிலிருந்து முதலில் எழுந்தவராவார். இந்த தலைப்பு இயேசுவின் உயிர்த்தெழுதலையும், மரணத்திற்கு உட்படாத ஒரு புதிய ஜனக்கூட்டத்தின் தலைவராக அவரது அதிகாரத்தையும் குறிக்கிறது. ஆனால், ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் எலியா, எலிஷா மரணத்திலிருந்து ஒரு சிலரை எழுப்பினார்கள் அல்லவா?
லாசரு, நாயீன் ஊராளாகிய ஒரு விதவையின் மகன் மற்றும் ஜெப ஆலயத்தலைவராகிய யவீருவின் மகள் என்ற 3 பேரை மரணத்திலிருந்து இயேசுவே எழுப்பினார் என்று சுவிசேஷ புத்தகங்களில் வாசிக்கிறோமே!
அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்தில், பேதுரு தொற்காள் என்ற தபீத்தாளை உயிர்ப்பித்தார், மேலும் அப்போஸ்தலனாகிய பவுல் ஐத்திகு என்ற வாலிபனை உயிர்ப்பெறச் செய்தார். இவர்களுக்கும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அவர்கள் அனைவரும் பின்பு ஒருநாள் மரித்தனர், ஆனால் இயேசு உயிர்த்தெழுந்த பின் மீண்டும் மரிக்கவில்லை. அவர் இன்றும் உயிருடன் இருக்கிறார், நம்முடன் பேசுகிறார். அவரது சரீரம் அழியவில்லை, இன்று வரை அவர் கல்லறை காலியாகத்தான் உள்ளது! இதுவே மெய்யான உயிர்த்தெழுதல்.
"மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம், மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை."
ரோமர் 6:9
மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு, மறுபடியும் வரும்போது அவரைப் போலவே நாமும் உயிர்த்தெழ வழிவகுத்துள்ளார். நம் ஆத்துமா பரலோக்கத்திற்குச் செல்வது மட்டுமல்ல, நம் சரீரமும் இயேசுவைப் போலவே மறுரூபம் ஆகும். அந்நாளில் கிறிஸ்துவுக்குள் இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்; அவர்களுடைய சரீரம் பூரணமாகும், அவர்கள் இனி ஒருபோதும் மரிக்க மாட்டார்கள். நித்திய ஜீவனேயன்றி, நித்திய மரணம் அவரை நம்பினோருக்கு இல்லை!
[Strong's Greek:
4416. prototokos - firstborn
3498. nekros - dead]
No comments:
Post a Comment