"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்"
புத்தர், தனது வாழ்க்கையின் முடிவில், "நான் இன்னும் சத்தியத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்“ என்றார்.
யோவான் 14:6 - ல் இயேசு, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" என்று கூறுகிறார்.
இரட்சிப்பிற்கு வேறொரு வழி இருந்திருந்தால், இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்க மாட்டார். "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும், ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று இயேசுவே ஜெபம்பண்ணினார். ஆனால் பதில் பரலோகத்திலிருந்து வரவில்லை, ஏனென்றால் பிதாவுக்கும் வேறு வழியில்லை என்று தெரியும். இயேசு மட்டும் சிலுவையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால், நம் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றிருக்கவே முடியாது.
மனிதனை அப்பத்தினால் மட்டும் காப்பாற்ற முடியாது. நல்ல செயல்களாலோ, மதத்தாலோ அல்லது அவனது சொந்த படைப்புகளாலோ காப்பாற்ற முடியாது. நித்திய வாழ்கைக்கு ஒரே ஒரு வழி இருக்கிறது, அது ஒரு குறுகிய வழி, எல்லோராலும் அந்த வழியில் எளிதாக நடக்க முடியாது. அது கிறிஸ்துவின் சிலுவையினாலும் அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்டால் மட்டுமே முடியும்!
• இயேசு வழியைக் காட்டிவிட்டுப் போகவில்லை; அவரே வழி என்றார்.
• அவர் சத்தியத்தைப் பேசுவது மட்டுமல்லாமல், அவரே சத்தியத்தின் அவதாரம் என்றார்.
• அவரே ஜீவன், ஜீவன் இல்லாமல் நாம் பிதாவை அடைய முடியாது.
No comments:
Post a Comment