Monday, June 10, 2024

நானே திராட்சச்செடி

 "நானே திராட்சச்செடி"

யோவான் 15:5 இல் இயேசு கூறுகிறார், "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" என்று.
பிதாவாகிய தேவன் திராட்சத் தோட்டக்காரர் என்பதை நாம் அறிவோம். திராட்சக்கொடிகளைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான காரியம் என்னவென்றால், திராட்சை எந்த மரத்திலிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாது. அதேபோல், நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர் அல்லது எந்த 'Denomination'-ஐ சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. தேவனுக்கு நீங்கள் அவருடைய சபையின் ஒரு அங்கத்தினர் என்பதுதான் முக்கியம். சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கிளைகள். கனிகொடாதவர்கள், ஆழமற்ற விசுவாசம் இல்லாதவர்கள், கொஞ்ச நாட்களில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதைக் கைவிடுபவர்கள், கைவிடப்படுவார்கள் அல்லது செடியிலிருந்து துண்டிக்கப்படுவார்கள்.
"நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்".
-யோவான் 15:1, 2
கலாத்தியர் 5:22-23 இல், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்" என்று வாசிக்கிறோம்.
இவை அனைத்தும் உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் உள்ளதா?

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...