மத்தியஸ்தராகிய இயேசு
"தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே..."
1 தீமோத்தேயு 2:5, 6
தேவனையும் மனிதர்களையும் பிரிப்பது நம்முடைய பாவம் தான். பழைய ஏற்பாட்டில் மோசே மத்தியஸ்தராக செயல்பட்டார். புதிய ஏற்பாட்டில் இயேசுவே மத்தியஸ்தர்.
இயேசு ‘மத்தியஸ்தர்’ என்பதால் அவர் பிதாவுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள பிரச்சனையைத் தீர்த்துவைக்கிறார் அல்லது பிரிந்துநிற்கும் இரு சாராரைச் சமாதானம்பண்ணி ஒப்புரவாக்குகிறார் என்று அர்த்தமல்ல. மாறாக, அவர் புது உடன்படிக்கையின் பிணையாளியாக அல்லது உறுதிசெய்கிறவராக இருக்கிறார்.
"புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்."
எபிரேயர் 12:24
தேவதூதர்களோ, மறித்தவர்களோ, அல்லது புனிதர்களோ அல்ல, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து ஒருவரே மத்தியஸ்தர்!
No comments:
Post a Comment