"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்"
யோவான் 11:25-26 இல் இயேசு, "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்..." என்கிறார்.
அவர் 'என்னால் உயிர்த்தெழமுடியும்' என்று கூறவில்லை, அவர் 'நானே உயிர்த்தெழுதல்' என்கிறார்.
ஒரு மரணம் நிகழும்போது, அது ஒரு நண்பராக இருந்தாலும் சரி, குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, மிகவும் வேதனையும் கஷ்டமும் நமக்கு ஏற்படும். இது போன்ற கடினமான காலங்களில், அனைத்தையும் நேர்மறையாக (positive-ஆக) சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
"மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."
- யோவான் 5:25
இருள், வெறுமை மற்றும் தனிமையைக் கண்டு அஞ்ச வேண்டாம். இயேசு நம்மோடு இருப்பதனால், நாம் மரணத்தைப் பற்றி பயப்படத் தேவைல்லை. கிறிஸ்து வரும்போது நாம் மீண்டும் உயிர்த்தெழுவோம்.
"அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்."
ரோமர் 8:11
No comments:
Post a Comment