"நானே ஆடுகளுக்கு வாசல்"
யோவான் 10:7 இல், இயேசு "நானே ஆடுகளுக்கு வாசல்" என்று கூறுகிறார், "நானும் ஒரு வாசல்" என்றல்ல!
இயேசு ஆடுகளாகிய நம்மை ஆட்டுத்தொழுவத்திற்கு அழைத்துச் செல்லும் மேய்ப்பன் மட்டுமல்ல, நாம் அதற்குள் உட்பிரவேசிக்கத்தக்கதான ஒரே வாசலும் அவர்தான் (யோவான் 10:9).
மனிதன் வளர்க்கும் அனைத்து விலங்குகளிலும், ஆடுகள் மிகவும் திக்கற்றவை. ஆடுகள் காலை முழுவதும் மேய்ச்சலில் நேரத்தை செலவிடும், இடம் விட்டு இடம் அலைந்து திரியும், ஒருபோதும் சுற்றிப் உள்ள ஆபத்தைப் பார்க்காது. இதன் விளைவாக, அவை அடிக்கடி வழித்தவறி போகும். மற்ற விலங்குகளைப் போல ஆடுகளுக்கு “உள்ளுணர்வு” இருக்காது.
ஆடுகளுக்கு தங்கள் தொழுவம் கண் பார்வையில் இருக்கும்போது கூட அதைக் கண்டுபிடிக்கத் தெரியாது. இயல்பிலேயே ஆடுகள் மற்ற ஆடுகளை பின்பற்றுபவைகள். முன்னிருக்கும் ஆடு ஒரு குன்றிலிருந்து இறங்கினால், மற்றவைகள் அப்படியே பின்தொடரும். ஆடுகள் அடிக்கடி காயங்களுக்கு ஆளாகின்றன, மேலும் அவைகள் எளிதில் எதிரிகளால் தாக்கப்படலாம்.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு, இயேசுவே மேய்ப்பனாகவும், வாசலாகவும் இருக்கிறார். அவர் நம் எல்லாத் தேவைகளையும் சந்திக்கிறார்.
இவ்வுலகம் நம் ஆத்துமாவை வேட்டையாடுபவர்களால் நிரம்பியுள்ளது. நம்மை அழிப்பதே அவர்களின் ஒரே நோக்கம் என்பதை அறிந்து, நாம் எப்போதும் அவருடைய பாதுகாப்பில் இருக்கவேண்டும்.
சபையின் மேய்ப்பர்களுக்கு தேவன் கூறும் அறிவுரை 1 பேதுரு 5:2-4 இல் உள்ளது:
"உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்."
No comments:
Post a Comment