நானே நல்ல மேய்ப்பன்
யோவான் 10:11 இல் இயேசு "நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்" என்றார்.
தேவன் தனது ஜனத்துடன் வைத்திருக்கும் உறவை விவரிக்க எந்த விலங்கை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் அவர் ஒரு காரணத்திற்காகத்தான் ஆடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்!
• ஒரு நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை முற்றிலுமாக அறிவான்.
நமக்கு நம்மைப்பற்றித் தெரிந்ததை விட தேவனுக்குதான் அதிகம் தெரியும்!
• ஒரு நல்ல மேய்ப்பன் ஆடுகளைக் கவனித்து, உணவளித்து, செல்ல வேண்டிய வழியில் வழிநடத்துவான்.
• ஒரு நல்ல மேய்ப்பன் ஆடுகளை அவற்றின் நலனுக்காகத் தேவைப்படும்போது ஒழுங்குபடுத்தி சரிசெய்வான்.
• ஒரு நல்ல மேய்ப்பன் நோயுற்றவைகளையும் காயப்பட்ட ஆடுகளையும் தன் தோளில் சுமப்பான்.
• ஒரு நல்ல மேய்ப்பன் வழிதவறிச் சென்ற ஆடுகளைக் கண்டுபிடிப்பான். ஒரு ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற தேவன் மற்ற 99ஐ விட்டுப்போகிறார்.
• ஒரு நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளைப் பாதுகாத்து எதிரிகளை எதிர்த்துப் போராடுவான்.
ஒரு நல்ல மந்தையின் வேலை என்ன?
• மேய்ப்பனை நன்கு அறிந்திருக்க வேண்டும்
• மேய்ப்பனின் குரலை மட்டும் கேட்க வேண்டும்.
• மேய்ப்பனைப் பின்தொடற வேண்டும்.
"மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்..."
No comments:
Post a Comment