"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்"
யோவான் 8:12 இல் இயேசு "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" என்றார்.
நீங்கள் ரசித்த ஒரு சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தைப் பற்றி சிந்தியுங்கள். நான் கன்னியாக்குமரியில் பார்த்த Sunrise & Sunset மிகவும் அழகாக இருந்தது! சிலர் ஏன் சூரியனை கடவுளாக வணங்குகிறார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது.
தேவனே ஒளியாக இருந்தார். அவரே ஒளியைப் படைத்தவர். 1 தீமோத்தேயு 6:16 - ல் "ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக" என்று பவுல் கூறுகிறார்.
ஒளி என்பது ஞானத்திற்கு உவமையாக இருக்கிறது. அன்பின் அடிப்படையில் செய்யும் கிரியைகள் மூலம் ஞானம் பெறப்படுகிறது.
இயேசு மேலும் "நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்றார். அவர் பரமேறியதும், அப்போஸ்தலர்கள் அந்த ஒளியைப் பரப்பத் தொடங்கினர். அவர்கள் உருவாக்கிய தேவாலயங்களுக்கு அவர்கள் வெளிச்சமாக இருந்தார்கள்.
அதேபோல், நம் அனைவருக்கும் ஒரு ஒளி இருக்கிறது, மற்றவர்கள் அதைக் காணும்படி உங்கள் ஒளி பிரகாசிக்கட்டும். அதை மறைக்க வேண்டாம். உங்களுக்கு வழங்கப்படும் திறமையை புதைக்காதீர்கள். இந்த இருளடைந்த உலகில் ஒரு ஒளியாக இருங்கள். தேவன் உங்களை எங்கு வைத்தாலும் எழும்பி பிரகாசியுங்கள்!
No comments:
Post a Comment