Monday, June 10, 2024

யேகோவா சத்தார்

யேகோவா சத்தார்

பொருள்: என் மறைவிடமாயிருக்கும் தேவன்
"தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்."
சங்கீதம் 27:5
(Sathar / cether என்றால் மறைவிடம் / மறைப்பது [Strong's:5643] )
தேவனுடைய சிறகுகளின் நிழலின் கீழ் ஒளிந்துகொள்வதை வேதாகமம் அடிக்கடி பயன்படுத்துகிறது.
தேவன் தனக்கு பிரியமான அனைவரையும் எதிரிகளிடமிருந்து மறைத்தார். அரண்மனைக்கு வருவதற்கு முன்பு தேவன் யோசேப்பை சிறையில் மறைத்து வைத்தார். எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிப்பதற்கு முன் மோசேயை பாலைவனத்தில் மறைத்து வைத்தார். தாவீது ராஜாவாவதற்கு முன்பு வனாந்தரத்தில் சவுலிடமிருந்து மறைத்து வைத்தார்.
புயல்களின் போது, நாம் குகைகளுக்கு அல்லது ஏதோ ஒரு பாதுகாப்பான இடத்திற்கு ஓடுவோம். ஆனால் மனதில் ஏற்படும் புயல்களின் போது நாம் எங்கே ஓடுவோம்?
பாவம் செய்த பிறகு ஆதாம் தேவனிடமிருந்து ஒளிந்ததுபோல் இல்லாமல், இப்போது நாம் தேவனிடம் ஓடி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது என்ன ஒரு ஆசீர்வாதம்!
"நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர், என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்."
சங்கீதம் 32:7
நீங்கள் தனிமையாக இருப்பதுபோல உணர்ந்தீர்களென்றால், தேவன் உங்களை மறைத்துவைத்துள்ளார் என்று புரிந்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...