பொருள்: உன்னதமான தேவன்
"உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான்..."
“ஏல்” என்பது "ஏலோஹீம்"-ன் சுருக்கம். அது தேவனின் வல்லமையைக் குறிக்கும். "எல்யோன்" என்றால் "மிகவும் உயர்ந்தவர்" என்று அர்த்தம்.
எனவே "ஏல் எல்யோன்" என்றால் "கர்த்தாதி கர்த்தர், மிக உன்னதமான தேவன்" என்று பொருள்.
நம் ஏல் எலியோன் தேவனே இந்த வானம், பூமி ஆகியவற்றின் உரிமையாளர்.
இந்த பெயரை முதன்முதலில் சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கும், ஆபிரகாமும் ஆதியாகமம் 14 இல் பயன்படுத்தியுள்ளனர்.
பூமியில் உருவாக்கப்பட்ட எந்த சிலையையும் எந்த பொருளையும் தேவனுக்கு மேல் உயர்த்தக்கூடாது, ஏனென்றால் அவர் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்தவர்.
நம் தேவன் எந்த மலையையும் விட உயர்ந்தவர், நாம் கற்பனை செய்யக்கூடிய எதையும் விட பெரியவர். அவரை எதுவும் கட்டுப்படுத்த முடியாது. வானம் அவருடைய சிங்காசனம்; பூமி அவருடைய பாதப்படி. அரசர்கள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஜனாதிபதிகள், அமைச்சர்கள் யாரும் தேவனுடைய சித்தம் இல்லாமல் தங்கள் பதவிகளைப் பெற முடியாது.
"எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." - சங்கீதம் 57:2
No comments:
Post a Comment