பொருள்: "தேவன், இஸ்ரவேலின் தேவன்”
ஆதியாகமம் 28:20-21 இல், யாக்கோபு தேவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருப்பதைக் காணலாம்:
தேவனை யாக்கோபு இன்னும் அவரது தந்தை ஈசாக்கின் தேவனாகவும் அவரது தாத்தா ஆபிரகாமின் தேவனாக மட்டுமே அழைக்கிறார்... தன்னுடைய தேவனாக குறிப்பிடவில்லை. தேவனுக்கும் யாக்கோபுக்கும் எந்த உறவும் இல்லை. யாக்கோபு தன் சிருஷ்டிகருடன் பேரம் பேசும் மனநிலையுடன் இருப்பதை நாம் இங்கே காண்கிறோம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, யாக்கோபு தேவனுடன் போராடி, அவர் தேவனுக்கு இந்தப் பெயரைக் கொடுத்ததைக் காணலாம். "எத்தன்" என்ற அர்த்தம் உடைய யாக்கோபு, 'இஸ்ரவேல்' என்று தேவனால் மாற்றப்பட்டார். அதாவது "தேவனுடன் போராடுபவன்" என்று அழைக்கப்பட்டார். (ஆதி 22)
"யாக்கோபு...அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்."
ஆதியாகமம் 33:20
யாக்கோபு ஒரு ஏமாற்றுக்காரர், சுயநலமுடையவர். தேவனுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவர் தனது வாழ்க்கையை மாற்றிய மூன்று முக்கியமான விஷயங்களைச் செய்தார்.
• அவர் தன்னை ஒரு பாவி என்று ஒப்புக்கொண்டார்.
• அவர் தேவனின் வார்த்தையை விசுவாசித்தார்.
• அவர் தேவனுடைய நாமத்தை அழைத்து அவரை தன் ஆண்டவராக ஒப்புக்கொண்டார்.
இப்போது தேவன் ஆபிரகாம், ஈசாக்கின் தேவன் மட்டுமல்ல, யாக்கோபின் (இஸ்ரவேலின்) தேவன் என்றும் குறிப்பிடப்படுகிறார்!
No comments:
Post a Comment