பொருள்: "சத்திய தேவன்"
"உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன், சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்." -சங்கீதம் 31:5
தேவன் தம்முடைய எல்லா செயல்களிலும் உண்மையுள்ளவர். அவருடைய வாக்குறுதிகள் சத்தியமானவை. அவரால் பொய் சொல்ல முடியாது. அவர் நீதியின்படி தீர்ப்பளிக்கிறார். வெளிப்புற தோற்றத்தின் அடிப்படையில் அல்ல, உள்ளதை உள்ளபடி பேசுகிறார். அவரிடமிருந்து வெளிப்படும் அனைத்தும் பரிசுத்தமானவை, எந்த குறையும் இல்லாதவை. அவருடைய நியாயத்தீர்ப்பு, பிரமாணம், கட்டளைகள் மற்றும் அவருடைய வார்த்தைகள் யாவும் உண்மையானவை; அநீதியையும் குற்றங்களையும் எதிர்க்கிறவை.
"பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்: உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்."-
நீதிமொழிகள் 12:22
பத்து கட்டளைகளில் ஒன்று "பொய் சொல்லாதிருப்பாயாக!" என்பது. நாம் ஒருபோதும் பொய் சாட்சிகளாக இருக்கக்கூடாது. வேதம் சாத்தானை "பொய்க்குப் பிதா" என்றும் பொய்யர்களை அவனுடைய பிள்ளைகள் என்றும் அழைக்கிறது. வதந்திகளையும், கட்டுக்கதைகளையும் நம்பாதீர்கள். கிசுகிசுக்களை பரப்பும் ஒருவராக இருக்காதீர்கள். நம்முடைய உணர்ச்சிகளின் அடிப்படையிலோ, தவறான தகவல்களின் அடிப்படையிலோ இல்லாமல், சத்தியத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று தேவனிடம் வேண்டுவோம். பொய் சொல்வோருக்கு எதிராக தேவனுடைய உதவியைக் கேட்போம்.
"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்."
யோவான் 8:32
No comments:
Post a Comment