பொருள்: ஞானமுள்ள தேவன்
கர்த்தரே எல்லா ஞானத்திற்கும் ஆரம்பமானவர். மனிதன் பெற்ற அறிவு அனைத்தும் அவரிடமிருந்து வந்தவை.
நம் தேவன் "சர்வ ஞானி", அதாவது அவருக்கு சகலமும் தெரியும்.
"நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்."
1 யோவான் 3:20
தேவன் நம்மைப் பற்றி மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தை பற்றியும் அறிந்திருக்கிறார். ஒரு குருவிக்குக்கூட எப்போது என்ன தேவை என்று அவருக்குத் தெரியும். கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அனைத்தையும் அவர் அறிவார். அவர் நம் இருதயங்களின் ஆழத்தை அறிந்திருந்தும் நம்மை நேசிக்கிறார்.
தேவனுக்கு மர்மம் என்று ஒன்றுமே இல்லை.
நாம் பேசுவதற்கு முன்பே அவர் நம் எண்ணங்களை அறிவார். சங்கீதம் 139-இல், தாவீது தேவனுடைய சர்வ ஞானத்துவத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.
தேவனுக்குத் தெரியாத இடத்திற்கு நாம் செல்ல முடியாது, அவருக்கு தெரியாத எதையும் நாம் செய்ய முடியாது. நம் நினைவுகளில் தேவனுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.
மனிதன் தேவனைத் தவிர்த்து ஞானியாக மாற முயற்சிக்கிறான், ஆனால் அது முட்டாள்த்தனத்தில் முடிகிறது. நாம் தேவனுக்கு அஞ்சி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, ஒருவரையொருவர் நேசிக்கும்போது, நாம் அவரை அறிந்து கொள்வோம். அவருடைய ஞானம் நமக்கு வழிகாட்டும்.
No comments:
Post a Comment