பொருள்: என் ஜீவனுடைய தேவன்
எபிரேய வார்த்தையான “ஃகாய்” என்பது ‘வாழ்க்கை’யைக் குறிக்கிறது. தேவன் நம் நித்திய வாழ்வை மட்டுமல்ல, இந்த தற்காலிக வாழ்வையும் பார்த்துக்கொள்கிறார். அவரே நம் வாழ்வின் ஆதாரம்.
விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் தங்கள் ஆய்வகங்களில் ஜீவனை (உயிர்) 'உருவாக்க' முயற்சித்துள்ளனர். ஆனால் தோல்வியைத்தான் அடைந்துள்ளனர், ஏனென்றால் ஒரு உயிரை ஏற்கனவே இருக்கும் ஒரு உயிரிலிருந்து மட்டுமே உருவாக்க முடியும்.
"சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது." - யோபு 12:10
கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே நம் வாழ்வின் முக்கிய நோக்கம். ஒரு 'ரோபோ'வை அதன் கையேட்டைப் படிக்காமல் இயக்க முடியாது. நம் வாழ்வின் கையேடு தேவனுடைய வார்த்தை. நம் வீட்டில் ஏதேனும் ஒரு மின்சார சாதனம் வேலை செய்யவில்லை என்றால், அதை பழுது பார்க்க உற்பத்தியாளரை அழைப்போமல்லவா? அதேப்போல, நமக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால், முதலில் நம் படைப்பாளரை, நமக்கு ஜீவன் தந்தவரை அழைக்க வேண்டும். அதனால் தான், தற்கொலை செய்தவர்கள் நிச்சயமாக நரகத்திற்குச் செல்வார்கள் என்று நம்புகிறோம். உயிரை மாய்த்துக் கொள்ள யாருக்கும் அதிகாரம் இல்லை, ஏனென்றால் நம் வாழ்வின் உரிமையாளர் நாம் அல்ல!
வாழ்வும் மரணமும் தேவனுக்கும் நமக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். வாழ்வை விரும்புகிறவர்கள் தேவனைத் தேடுவார்கள், மரணத்தை விரும்புபவர்கள் தேவனிடமிருந்து விலகிச் செல்வார்கள். நம் தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்.
No comments:
Post a Comment