பொருள்: மன்னிக்கிற தேவன்
"...நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர்."
('நோஸ்' என்றால் எபிரேயத்தில் 'மன்னிக்கிற' என்று பொருள்)
தேவன் அவருக்கு எதிரான நமது பாவங்களை முற்றிலும் அழிக்கிறவராய் இருக்கிறார். அவர் மூலம் மற்றவர்களை எப்படி மன்னிப்பது என்பதைக் கற்றுக்கொள்கிறோம். நம்மை தேவன் மன்னிப்பது போலவே, சக மனிதர்களை உண்மையாக மன்னித்தால், நாம் நம் எண்ணங்களிலிருந்து பாவத்தை அகற்றி, அன்பினால் நம் உறவுகளைத் தொடரலாம்.
"ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை."
நெகேமியா 9:17
ஏதேன் தோட்டத்தில் உண்டான முதல் பாவம் முதல் இன்றுள்ள ஜனங்களின் பாவங்கள் வரை, "ஏல் நோஸ்" மன்னித்துள்ளார். ஆனாலும் பாவத்திற்கு ஒரு விளைவு இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ரோமர் 6:23 கூறுகிறது, “ பாவத்தின் சம்பளம் மரணம்” என்று. ஆவிக்குறிய மரணம் தான் நாம் நம் பாவங்களுக்காக பெறக்கூடிய தண்டனை. ஆயினும், மனந்திரும்புதலுடனும், மனவருத்தத்துடனும் நாம் தேவனிடம் வரும்போது, நம் பாவங்களை மன்னிப்பதற்கும், எல்லா அநீதிகளிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவதற்கும் "எலோஹே செலீகொட்" தயாராக இருக்கிறார்.
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."
1 யோவான் 1:9
No comments:
Post a Comment