Tuesday, March 26, 2024

ஏல் ஓலாம்

 பொருள்: சதாகாலமுமுள்ள தேவன் / நித்திய தேவன்

ஆதியாகமம் 21:33 இல், ஆபிரகாம் ஒரு தோப்பை உண்டாக்கி, தேவனை "சதாகாலமுமுள்ள தேவன்" என்று அழைக்கிறார்.
இது எபிரேய மொழியில் "ஏல் ஓலாம்" எனப்படும். நித்திய தேவன் என்றும் அழைக்கலாம்.
ஆதியும் அவரே, அந்தமும் அவரே; ஒருபோதும் வயதாகாத தேவன் அவர்.
கடவுளைப் பற்றிய நமது கற்பனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர் அதைவிடப் பெரியவர்.
தேவன் மட்டுமே உண்மையில் நித்தியமானவர். அவர் காலத்திற்கு கட்டுப்பட்டவர் இல்லை. அவருக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. அவர் ஒருபோதும் அவசரப்படுவதுமில்லை,ஒருபோதும் தாமதிப்பதுமில்லை. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அனைத்தும் தேவனுக்கு ஒரே மாதிரியானவை. தேவனை யாரும் ஆச்சரியப்பட வைக்க முடியாது. அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறதினால் எதையும் புதிதாக கற்றுக் கொள்ளத்தேவையில்லை.
"இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன், மரணபரியந்தம் நம்மை நடத்துவார்."
சங்கீதம் 48:14

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...