ஏல் ஹன்னோரா / யேகோவா யாரே
பொருள்: பயங்கரமான தேவன்
(Awesome God)
எபிரேய மொழியில் "நோரா" என்றால் "பயங்கரமான" என்றும் "மிகவும் பிரமிக்கத்தக்க" என்றும் அர்த்தம்.
தேவனை விட பிரமிக்கத்தக்கவர் யார்?
"நோரா" என்ற வார்த்தை பயத்திற்கான எபிரேய வார்த்தையாகிய
"யாரே"-உடன் தொடர்புடையது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் என்றால் நாம் சிங்கத்திற்கும் யானைக்கும் பயப்படும் பயத்தைப்போன்றது அல்ல. "ஃபோபியா" என்று நாம் அழைக்கும் பல பயங்கள் மனிதர்களுக்கு உள்ளன - உயரங்களுக்கு பயம், பாம்புகளுக்கு பயம், இருளுக்கு பயம்... ஆனால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பயம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்தின்படி வாழ்வது. அதைத்தான் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். நாம் தேவனுக்கு பயபக்தியுடன் இருந்தால் வேறு எந்த பயத்தையும் மேற்கொள்ள முடியும்.
"உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு..." - உபாகமம் 28:58
இப்படிப்பட்ட தேவனை மற்றவர்களோடு எப்படிப் பகிர்ந்துக்கொள்ளாமல் இருக்கமுடியும்? உங்களிடம் உள்ள எதையாவது பற்றி நீங்கள் எப்போதாவது பெருமை பேசப் போகிறீர்கள் என்றால், ஏல் ஹன்னோராவைப் பற்றிப் பேசுங்கள்!
"உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்."
யாத்திராகமம் 34:10
No comments:
Post a Comment