Tuesday, March 26, 2024

ஏலோஹிம்

பொருள்: தேவன் (God)

வசனம்: "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்."
- ஆதியாகமம் 1:1
"ஏலோஹிம்" என்பது தேவனுக்கு நான் கண்ட மிக சுவாரஸ்யமான நாமங்களில் ஒன்று. தேவன் தன்னை அறிமுகப்படுத்த தேவத்தின் முதல் வசனத்தில் பயன்படுத்திய நாமம் இதுவே. இது வேதத்தில் 2500 தடவைகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"ஏலோஹிம்" என்பது உயர்ந்த அதிகாரம் கொண்டவர்களைக் குறிக்கிறது - நீதிபதியையோ, ஒரு ராஜாவையோ கூட குறிக்கும். ஆனால் நம் கர்த்தர் "தேவாதி தேவன்" - தேவர்களுக்கெல்லாம் தேவன். தேவதூதர்கள் மற்றும் சில சமயங்களில் மனிதர்களைக்கூட "தேவக்குமாரர்கள்" என்று குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம்.
வேதத்தில் உள்ள பல பெயர்களில் 'ஏல்' என்ற உச்சரிப்பு உள்ளது. 'எலி'யா, 'எலி'சா, சாமு'வேல்', யோ'வேல்', தானி'யேல்' மற்றும் தேவதூதர்களும் 'ஏல்' ஐ அவர்களின் பெயர்களில் கொண்டுள்ளனர்: மிகா'வேல்', கபிரி'யேல்' என்று பட்டியல் நீடித்துக்கொண்டே போகிறது. ஏன்...இஸ்ர'வேல்' என்ற பெயர் கூட "ஏல்" இல் தான் முடிகிறது.
நாம் ஆராதிக்கும் ஏலோஹிம் தேவன்:
சர்வ வல்லமையுள்ளவரும், சர்வ ஞானியும், சர்வ வியாபகருமானவர்.
நம் தேவன் காலத்திற்கோ அல்லது இடத்திற்கோ உட்பட்டவரில்லை. தமிழில் "இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்" என்ற பழமொழி உள்ளது, ஆனால் ஏலோஹிம் தேவன் ஒரு ஜுவனில்லாத பொருளில் இல்லை. அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார், ஆனால் ஒரு பொருளுக்குள் இல்லை. தேவன் விக்கிரகாராதனையை வெறுப்பதற்குக் காரணமும் இதுவே.
(சங்கீதம் 115:4-9)

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...