பொருள்: பரலோகத்திலிருக்கிற தேவன்
வசனம்: "எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்,..."
-2 நாளாகமம் 20:6
பண்டைய எபிரேயர்கள் பூமிக்கு மேலே 3 அடுக்கு வான மண்டலம் உள்ளது என்று நம்பினார்கள். நம் கண்களால் காணக்கூடிய வானத்தை "முதல் வானம்" என்று அழைத்தார்கள். அதற்கு மேலே ஒரு உறுதியான, ஐலத்தால் நிறைந்த, இன்று நாம் "ஓசோன் படலம்" என்று அழைக்கும் மண்டலத்தை "இரண்டாம் வானம்" என்றனர். (அந்த ஜலம் இப்போது இல்லை. நோவாவின் வெள்ளத்தின் போது அது தீர்ந்துவிட்டது.) இரண்டாம் வானத்திற்கு அப்பாற்ப்பட்ட எல்லாவற்றையும் நாம் "விண்வெளி" என்று கருதுகிறோம்.
இதற்கும் மேலானதுதான் "மூன்றாவது வானம்"/"பரமண்டலம்", அங்கு தேவன் வசிக்கிறார் என்று நம்பினார்கள்.
இது நமக்கு முக்கியமா...? ஆம் என்பதற்கு பல சாத்தியமான காரணங்கள் உள்ளன, ஆனால் நான் மிகவும் புதிரானதாகக் கருதுவது என்னவென்றால், அது முக்கியமானது என்று இயேசுவே நினைத்தார். தன் சீடர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் போது, "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" (அப்பா பாஷமாயிம்) என்ற சொற்றொடருடன் தொடங்குகிறார் என்பதைக் கவனியுங்கள். இயேசு ஏன் இந்த அறிவிப்புடன் ஆரம்பிக்கிறார்? இரண்டு காரணங்களுக்காக:
• முதலாவது, யாரிடம் ஜெபிப்பது என்று நமக்குத் தெரியும்படியாக. நாம் தேவதூதர்களிடம், புனிதர்களிடம் (Saints) அல்லது மரித்தவர்களிடம் ஜெபம் செய்யக்கூடாது.
• பரலோகத்தில் உள்ள தேவன் மற்ற எல்லா தேவர்களையும் விட உயர்ந்தவர் என்பதை நமக்குக் கற்பிப்பதற்காக.
இந்த தலைப்பு அவரது முழுமையான அதிகாரத்தையும் ஆட்சியையும் காட்டுகிறது. இது பண்டைய எபிரேயர்களால் மட்டுமல்ல, அவர்களின் எதிரிகளாலும் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று.
"ஏலோஹிம் பாஷமாயிம்" என்பது ஒரு பெயர் என்பதை விட ஒரு அதிகாரத்தின் தலைப்பாகும். நாம் ஆராதிக்கும் தேவன் மட்டுமே நமது துதி, நமது கனம், நமது நேரம் மற்றும் நமது பலிகளுக்குப் பாத்திரர் என்பதை நமக்கு நினைவூட்டும் பெயர் இது.
"...உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்."
யோசுவா 2:11
No comments:
Post a Comment