பொருள்: நான் துதிக்கும் தேவன்
சங்கீதம் 109 இல், தாவீது தன் சொந்த ஜனங்களால் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். தாவீது அவர்களுக்கு நன்மை செய்திருந்தும் பதிலுக்கு அவர்கள் தீமையையே செய்தனர். ஒரு மனிதன் தனது சொந்த ஜனத்தால் ஏமாற்றப்படும்போது, ஜெபிக்க உட்காருவதும் ஆராதிப்பதும் மிகவும் கடினம்.
தேவனைத் துதிப்பதற்காக தாவீது தன் மனநிலை மாறுவதற்காகக் காத்திருக்கவில்லை. வாழ்க்கை தனக்கு அநீதி இழைத்தாலும் எவ்வேளையும் தேவன் "துதிக்குப் பாத்திரர்" என்பதை அவர் அறிந்திருந்தார்.
சங்கீதம் 109 என்பது தேவன் மீது ஆழமான விசுவாசத்தைக்கொண்ட ஒரு மனிதனின் அழுகை.
அவர் தேவனை "மவுனமாயுராதேயும்" என்று சொல்வதை கவனியுங்கள்: தேவனிடமிருந்து வரும் வார்த்தையே விசுவாசிக்கு அவசியம்.
"சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா."
-சங்கீதம் 150:6
ஆண்டவரைக் குறித்து நம் உள்ளத்தில் ஏற்படும் இன்ப உணர்வுகளை வாயின் வார்த்தையினால் வெளிப்படுத்துவதே துதியாகும்! சகல சபை மக்களும் ஆராதனைகளில், ஜெபக் கூட்டங்களில் கரங்களைத் தட்டி, "அல்லேலூயா" (Hallelujah means "Praise the Lord") என்று பாடி தேவனை மகிமைப்படுத்துகின்றனர். இவ்வாறான துதி பலிகள் எங்கும் தொனிக்கட்டும். தேவனைக் கருத்துடன் பாடிப்போற்ற வேண்டியது அவசியம். கர்த்தருக்குப் பிரியமானதும் அதுவே.
"...தேவரீரே என் துதி."
- எரேமியா 17:14
No comments:
Post a Comment