பொருள்: "தேவனுடைய வீட்டின் தேவன்"
("ஏல்" - தேவன்; "பெய்ட்" - வீடு)
ஆதியாகமம் 12:8 இல் ஆபிராம் ஆயி பட்டணத்திற்கு அருகில் ஒரு இடத்தில் தனது கூடாரத்தைப் போட்டார். பின்னர் ஆதியாகமம் 28:12 இல், யாக்கோபு அதே இடத்தில் ஒரு சொப்பனத்தில் வானத்திற்கு ஏறும் ஒரு ஏணியைக் கண்டார். தேவன் நிச்சயமாக இந்த இடத்தில் இருக்கிறார் என்று சொல்லி, அதற்கு "பெத்தேல்" என்று பெயரிட்டார். இதன் பழைய பெயர் லூஸ். தற்போது 'பெய்டின்' என்று அழைக்கப்படுகிறது. இது பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைக்கு அருகில் அமைந்துள்ளது.
ஆபிரகாம், ஈசாக்கைப் போல யாக்கோபு தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. தேவன் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வரையருக்கப்பட்டவர் என்று எண்ணினார். இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதியாகமம் 35:1 இல், பெத்தேலில் ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி தேவன் யாக்கோபிடம் கேட்பதைக் காண்கிறோம். கர்த்தர் ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி கட்டளையிடுவது இங்கு மட்டுமே.
"அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்."
ஆதியாகமம் 35:7
தேவன் மற்ற விக்கிரகங்களைப் போல ஒரு இடத்திற்கு வரையறுக்கப்பட்டவரில்லை என்பதை யாக்கோபு உணர்ந்தார். அவர் அந்த இடத்தை "ஏல் பெத்தேல்" என்று மறுபெயரிடுகிறார். யாக்கோபைத் தவிர வேறு யாரும் தேவனை "ஏல் பெத்தேல்" என்று அழைக்கவில்லை. இது தேவனுடனான அவரது தனிப்பட்ட உறவைப் பிரதிபலிக்கிறது. இது யாக்கோபு தேவனுக்கு வழங்கிய மிகவும் தனிப்பட்ட நாமம்.
நீங்கள் ஜெபத்திலும் தியானத்திலும் நேரத்தைச் செலவிடும்போது, உங்களைக் காப்பாற்றிய கர்த்தர் உங்களுக்காக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களுடன் தனிப்பட்ட முறையில் உறவாட விரும்புகிறார். உங்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். ஆமேன்.
No comments:
Post a Comment