Thursday, July 25, 2024

யேகோவா யீரே

யேகோவா யீரே

Jehovah Jireh
பொருள்: கர்த்தர் பார்த்துக்கொள்வார்
God who provides
"ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது."
ஆதியாகமம் 22:14
மோரியா மலைக்கு ஆபிரகாம் தேவனுடைய கட்டளையின்படி தனது ஒரே மகன் ஈசாக்கை பலியிடச் சென்றார். மலையில் ஏறும் போது ஆபிரகாம் அனுபவித்திருக்கக்கூடிய வலியை கற்பனை செய்து பாருங்கள்! அவர் நினைத்திருந்தால் தேவனிடமிருந்து தப்பி ஓடியிருக்கலாம்! வயதானாலும் அவர் அநேக கால்நடைகள், வேலையாட்கள், நிலம், புகழ் போன்ற அனைத்து ஐசுவரியத்தையும் அவர் வைத்திருந்தார்: ஆனால் அவர் தேவனை விசுவாசித்ததால் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார். அன்று தேவன் ஈசாக்குக்கு பதிலாக ஒரு ஆட்டுக்கடாவை பலியிடச் சொல்லிவிட்டார். ஆபிரகாமுக்கு உயிரே போய் வந்தது போலிருந்திருக்கும்!
பரலோகத்தில் உள்ள நம் பிதா தனது ஒரே குமாரனை கல்வாரியில் நமக்காக பலியிடப்பட்டது போல, ஆபிரகாம் தனது மகனைப் பலியிடத் தயாராக இருந்தார்.
"... இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி."
யோவான் 1:29
நமது அன்றாடத் தேவைகளைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஆகாயத்து பட்சிகளுக்கு உணவளித்து, காட்டுப் புஷ்பங்களை உடுத்தும் தேவனுக்கு நமக்கு வேண்டியவை என்னவென்று தெரியும்!
"ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?"
மத்தேயு 6:25

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...