"ஈஷி"
"அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்."
ஓசியா 2:16
எபிரேயத்தில் "ஈஷி" என்றால் "புருஷன்" என்று பொருள். தன் மனைவியை சமமாக எண்ணும் ஒரு மனிதனைக் குறிக்கும் பதம். ஆனால் "எஜமான்/உரிமையாளர்" என்று பொருள்படும் "பாகாலி" என்ற வார்த்தை திருமணமான ஒரு ஆணைக் குறிக்கும், ஆனால் அவன் மனைவியை சமமாகப் பார்க்கமாட்டான். "ஈஷி" அன்பான கணவன், ஆனால் "பாகாலி" மனைவியை அடிமையாக நடத்துபவன்.
"ஈஷி” என்பது திருமண உறவு மற்றும் அன்பின் வெளிப்பாடாகும், அதே சமயம் “பாகாலி” என்பது உரிமை மற்றும் பயத்தின் வெளிப்பாடாகும். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான உறவு அன்பும் நட்பும் நிறைந்து இருக்க வேண்டும், ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கக்கூடாது என்று கர்த்தரே விரும்புகிறார். ஒரு மனிதன் தன் மனைவியை விரும்புகிறது போல, தேவன் இஸ்ரவேலை விரும்புகிறார். அவரை நாம் சார்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். நம் தேவைகளை சந்தித்து, பாதுகாத்து, ஆறுதல் அளித்து நம் நண்பராக இருக்க விரும்புகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பூமியில் "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று உண்மையாகச் சொல்லக்கூடிய ஒரே ஒருவர் தேவன் மட்டுமே. (எபி 13:5)
நம் தேவன் கானானிய தெய்வமான பாகால் போன்றவர் அல்ல. அவர் நம் தேவன், நாம் அவருடைய ஜனம்!
"உன் சிருஷ்டிகரே உன் நாயகர்..." - ஏசாயா 54:5
தேவன் தம்மை ஒரு கணவனாக காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன? ஆண்டவர் சபைக்கு மணவாளனே தவிர தனிப்பட்ட நபருக்கு அல்ல. 'Jesus is my husband' என்று சொல்வது தவறானது. ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வரும்போதுதான் மனைவி என்ற வார்த்தையே வருகிறது. அதற்கு முன்பு வரை மணவாட்டிதான்.
No comments:
Post a Comment