Wednesday, July 10, 2024

யேகோவா எசேர்

யேகோவா எசேர்

Jehovah Ezer
கர்த்தரே என் சகாயர்
God is my helper
"தனக்குத்தானே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுகிறார்" என்பது அடிக்கடி உலகத்தார் கூறும் பழமொழி. ஆனால் வேதம் இதற்கு எதிர்மறையாகக் கற்பிக்கிறது. நம் தேவன் உதவியற்றவர்களுக்கு உதவுகிறார்!
"...ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான், திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே."
- சங் 10:14
'எசேர்'/ 'அசார்' என்றால் உதவி/ஒத்தாசை என்று பொருள். இதிலிருந்துதான் எலியேசர், அசரியா, அஸரியேல், (எபெனேசர்) ஆகியோர் தங்கள் பெயர்களைப் பெறுகிறார்கள்.
சங்கீதம் 121:1,2 - ல் தாவீது இவ்வாறு பாடுகிறார்: "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்".
தேவன் நமக்கு உதவி செய்வதில்லை என்று சில இக்கட்டான நேரங்களில் நாம் நினைக்கிறோம். தேவன் தொலைவில் இருப்பதாக உணரும்போது நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்: பரீட்சையின் போது ஆசிரியர் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்! நாம் அவருடைய வார்த்தையை நம்பும்போது, அவர் நம் உதவியாளராக மட்டுமல்லாமல், நம் பாதுகாவலராகவும் இருப்பார்.
அதற்காக நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நாம் வெறுமனே ஜெபத்தை மட்டும் செய்துவிட்டு சும்மா இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வேலைக்காக வேண்டும்போது – வல்லமை தேவனுடைய கரங்களில் இருந்தாலும், நீங்கள் தீவிரமாக வேலையைத் தேட வேண்டும். இந்த அடிப்படையில், முதல் வாக்கியம் இங்கே ஓரளவு அர்த்தமுள்ளதாகத்தான் இருக்கிறது!
"அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே."
எபிரேயர் 13:6
[Strong's
5826 - azar
5827 - Ezer]

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...