பொருள்: தயவுள்ள தேவன்
("ஹெசட்" = அன்பு, கருணை, காருண்யம், கிருபை, இரக்கம், தயவு போன்ற கருத்துகளின் தொகுப்பைக் குறிக்கும்.)
-சங்கீதம் 145:9
இயேசுவின் வாழ்க்கையும் தியாகமும் தேவனின் தயவிற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
அநேகமாக, இயேசுவின் மிகக் குறைவாகப் புரிந்து கொள்ளப்பட்ட பண்புகளில் ஒன்று அவருடைய தயவு.
இயேசு ரோமர்களால் கைது செய்யப்பட்டு, தடிகளால் தாக்கப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டார். அவர் மேல் துப்பினார்கள், அவரை கேலி செய்தார்கள். அவரது மரணத்தை இஸ்ரவேலர்கள் முரையிட்டனர். அவர் ரோமானியர்களின் சாபத்தின் அடையாளமாகிய சிலுவையில் அறையப்பட்டார்.
"நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா" என்று யூதர்கள் அவருக்கு சவால் விடுத்தனர். இப்போது, அந்த நேரத்தில் அவர் செய்திருக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் கற்பனை செய்வோம். அவர் கடும் புயலை ஒரே வார்த்தையால் கட்டுப்படுத்தினார், தண்ணீர் மீது நடந்தார், 5,000 குடும்பங்களுக்கு 5 அப்பம், 2 மீனைப் பெருக்கி போஷித்தார். இறந்தவர்களை உயிரோடெழுந்து வரச்செய்தார். அந்த சிலுவையில் அவர் 10,000 தேவதூதர்களை அழைத்து அவரை விடுவிக்கவும் அந்த நன்றியற்ற தலைமுறையை அழித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இயேசு எந்த பாவமும் செய்யவில்லை, அவருடைய வாயில் எந்த வஞ்சகமும் காணப்படவில்லை. அவர்கள் அவரை அவமானப்படுத்தியபோது, அவர் பழிவாங்கவில்லை; அவர் துன்பப்பட்டபோது, அவர் எந்த அச்சுறுத்தலும் செய்யவில்லை. மாறாக, நியாயமாக தீர்ப்பளிக்கும் தன் பிதாவிடமே தன்னை ஒப்படைத்தார். அப்பொழுது இயேசு: "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."
தேவன் நம்மீது அன்பு கொண்ட தயவு எவ்வளவு பெரியது!
நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும் தயவோடு இருப்போம்.
"ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."
எபேசியர் 4:32
No comments:
Post a Comment