Tuesday, March 26, 2024

ஏல் யெஷூரன்

பொருள்: தம் நீதியுள்ள ஜனங்களின் தேவன்

"யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை, அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்."
- உபாகமம் 33:26
"யெஷூரன்" என்பது கவிதை நடையில் நீதிமான்களுக்கு வைக்கப்பட்ட ஒரு பெயர். இது எருசலேமையும் குறிக்கும். மெல்கிசேதேக் ராஜா ஆட்சி செய்தபோது இந்த நகரம் "சாலேம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது "ஷீலோ" என்றும் அழைக்கப்படுகிறது. (பொருள்: "சமாதானத்தின் நகரம்").
தாவீது தனது தலைநகராகத் தேர்ந்தெடுத்த நகரம் எருசலேம். இது யூத மக்களின் தாய் நகரம். இன்றுவரை அவர்களுக்கு மிகவும் புனிதமான இடமாகும்.
“எருசலேமின் தேவன்” என்பது யூதாவின் மக்களை கேலி செய்யும் போது அசீரியாவின் மன்னர் சனகெரிப்பின் ஊழியர்களால் தேவனுக்கு வழங்கப்பட்ட பெயர். அதே நேரத்தில் சனகெரிப் தேவனை "எசேக்கியாவின் தேவன்" என்றும் குறிப்பிட்டார்.
"மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்."
2 நாளாகமம் 32:19
யூதர்கள் பாபிலோனிற்கு நாடுகடத்தப்பட்டபோது, அர்தசஷ்டா ராஜாவும் எஸ்ராவுக்கு அதேப் பெயரை உள்ளடக்கிய ஒரு ஆணையை வெளியிட்டார். (எஸ்ரா 7:19)
தேவனை அறியாதவர்கள் மட்டுமே அவருக்கு ஒரு இடத்திற்கு வரையருக்கப்பட்ட பெயர்களைக் கொடுக்கிறார்கள். நம் தேவன் சர்வ பூமிக்கும் ஆண்டவர் என்பதை நாம் அறிவோம். மற்ற தெய்வங்களைப் போல அவருக்கு எல்லைகள் இல்லை. அவர் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமான்களுக்கும் தேவன்.

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...