"சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப் பட்டவர் வருவார். இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." - ஆகாய் 2:7
இயேசுவை அறிந்தாலும் அறியாவிட்டாலும் எல்லா ஜாதிகளின் விருப்பமும் இயேசுவே. "சில" ஜாதிகள் அல்ல, அவர் "சகல" ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர்.
ராஜ்யம் கர்த்தருடையது, அவரே தேசங்களை ஆளுகிறார். அவருடைய முதலாம் வருகை இருண்ட வானத்தை ஒளிரச் செய்தது. அரசர்கள் அவரைத் தேடினார்கள். கொடுங்கோலர்கள் அவரது பிறப்பால் அச்சுறுத்தப்பட்டார்கள். தேவதூதர்கள் அவருடைய பறப்பை அறிவித்தனர்.
"அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று. இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார்." - எபிரேயர் 12:26
No comments:
Post a Comment