வசனம்: "மணவாட்டியை உடையவனே மணவாளன்: மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்..." - யோவான் 3:29
மணவாட்டியாகிய சபை அந்த மகிழ்ச்சியான நாளுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவும், சரீரத்தை நிறைவு செய்யும் கடைசி விசுவாசி வரை சேர்த்துக்கொள்ள இயேசு காத்திருக்கிறார்.
"அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்." -மத்தேயு 25:1
மத்தேயு 25:1-13 மணமகனைச் சந்திக்கக் காத்திருக்கும் பத்து கன்னிகைகளைப் பற்றிப் பேசுகிறது. ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள், அவர்கள் கூடுதலாக எண்ணெய் வைத்திருந்தார்கள். ஆனால் மீதமுள்ள ஐந்து பேர் புத்தி இல்லாதவர்கள். எண்ணெய் தீர்ந்துவிட்டதால் மணமகனுடன் திருமணம் செய்யக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பை இழந்துவிட்டனர்.
இயேசுவை நம்பும் ஒவ்வொருவரும் சபையின் அங்கத்தினராக மாறுகிறார்கள். ஆனால், சபையார் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணத்தில் மணவாட்டியாக இருக்க மாட்டார்கள். எனவே அவருடைய மனைவியாக வேண்டும் என்றால் புத்தியுள்ள கன்னிகைகளைப் போல மணவாளனுடைய வருகைக்காக ஆயத்தமாயிருங்கள்.
"...ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்..." வெளி 19:9
No comments:
Post a Comment