யேகோவா கரோப்
Jehovah Karob
பொருள்: "சமீபமாயிருக்கிற தேவன்"
The Lord is near
"நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?"
உபாகமம் 4:7
ஒரு குழந்தையோ, செல்லப்பிராணியோ, எப்போதும் தங்கள் பெற்றோருக்கு, குறிப்பாக அம்மாவிற்கு அருகிலேயே இருக்கும். படுக்கையறைக்குள் பின்தொடரும், இடுப்பில் தொங்கும், சோபா-வில் அருகில் அமரும், மேசைக்கு அடியில் பாதத்திற்கு அருகிலேயே விளையாடும். இவை அனைத்தும் தன் தாயை அது நேசிப்பதற்கான வெளிப்பாடு, தாய்மார்களுக்கும் அது குழந்தையை பாதுகாக்க எளிதாக இருக்கும். அருகிலேயே இருப்பது அவர்களின் காதல் மொழி.
நம் தேவனும் ஏதோ தொலைவான இடத்தில் இல்லை! இயற்கையை ரசிக்கும்போதோ அல்லது மகிழ்ச்சியான தருணங்களில் நாம் பிரமிப்பில் இருக்கும்போது தேவன் நமக்கு மிக சமீபமாக உள்ளார் என்று சிலர் கூறுவார்கள்... ஒரு அதிசயம் நிகழும்போது சிலர் தேவனை மிக நெருக்கமாகக் காண்கிறார்கள் என்பது உண்மைதான்! ஆனால் இந்த வசனம் நமக்கு வித்தியாசமான ஒன்றை அளிக்கிறது: "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்."
- சங்கீதம் 34:18
தேவன் நம்முடன் இருப்பதை நாம் உணர்வது மகிழ்ச்சியான தருணங்களை விட நாம் மனம் உடைந்து, நொறுக்கப்பட்டு, தனிமையாக இருக்கும் நேரங்களில் தான் அதிகம். உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது.
"உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்."
ஏசாயா 57:15
[Strong's Hebrew: 7138. qarob - near]
No comments:
Post a Comment