யேகோவா கெமூலா / எல் ஆசிப்
பொருள்: சரிக்கட்டுகிற தேவன் /மீட்டெடுக்கும் தேவன்
எபிரேய மொழியில் கெமூலா என்றால் சரிகட்டுவது, ஆசிப் என்றால் மீட்டெடுப்பது என்று பொருள்.
கண்ணீரின் தீர்க்கதரிசியாகிய எரேமியா, தனது மக்களை சிறைப்பிடிக்க தேவன் பாபிலோனியர்களை அனுமதித்தாலும், அவர் அவர்களை பழிவாங்குவார் என்று இஸ்ரவேலை ஆறுதல்படுத்துகிறார்.
இழந்துபோனதை தேவன் மீட்டுக்கொடுப்பவர். இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு கண்ணீரும் இறுதியில் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நூறு மடங்கு திருப்பித் தரப்படும். நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அநீதிக்கும் தேவன் நமக்கு ஈடு செய்வார் என்பதை அறியவேண்டும். அவர் யோசேப்பு, நகோமி, ரூத், யோபு, லாசரு மற்றும் பலரின் வாழ்க்கையை இரட்டிப்பாக ஆசீர்வதித்த தேவன்.
நோய்க்குப் பதிலாக ஆரோக்கியத்தையும், வறுமைக்குப் பதிலாக ஐசுவரியத்தையும், துக்கத்திற்குப் பதிலாக ஆறுதலையும், நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கையையும், விசுவாசமற்றவர்களுக்கு விசுவாசத்தையும் கொடுக்கிறார்.
தேவனால் மீட்க முடியாத காரியம் எதுவும் இல்லை. முன்பு இருந்ததை விட நம்மை சிறந்தவர்களாக ஆக்குகிறார்.
"உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்."
- சங்கீதம் 51:12
No comments:
Post a Comment