யேகோவா பக்பூக்
Jehovah Bakbuk
பொருள்: தன்னை வெறுமையாக்கின தேவன்
நெகேமியா 11:17 இல், "பக்பூக்கியா" என்ற ஒரு லேவியனைக் காணலாம்.
பக்பூக்கியா என்றால் தன்னை வெறுமையாக்கின தேவனைக் குறிக்கும் பெயர்.
"தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்."
பிலிப்பியர் 2:7
இயேசு கடவுளாக இருப்பதை விட்டுவிட்டு பூமிக்கு வந்தார் என்று அர்த்தமல்ல.
இந்தியாவில், சில சமயங்களில் காவல்துறையினர் 'மஃப்டி' (Off Duty) – இல் ஒரு வழக்கைக் கைக்கொள்வார்கள். அவர்கள் சீருடை அணிவதற்குப் பதிலாக மற்றவர்களைப் போல சாதாரண ஆடைகளை அணிவார்கள். பணி நிறைவேறும் வரை Police என்ற தங்கள் அடையாளத்தைக் காட்ட மாட்டார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் சீருடையை மட்டுமே அகற்றுகிறார்கள், காவல்துறை வேலையை அல்ல.
அதேபோல், இயேசு பரலோகத்தில் தம்முடைய தெய்வத்துவத்தை வைத்துவிட்டு ஒரு சாதாரண மனிதனைப்போல செயல்பட்டார். நம்மை இரட்சிக்க இயேசு தன்னை வெறுமையாக்கினதற்கு தேவனுக்கு நன்றியுடன் வாழ்வோம்!
No comments:
Post a Comment