யேகோவா அடோன் கொல் ஹாரெட்ஸ்
[Jehovah Adon Kol Haarets]
பொருள்: "சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவர்"
வசனம்: "இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது..."
- யோசுவா 3:11
உலகை இயக்குவது யார்? யார் இந்த பூமியின் அதிபதி? அமெரிக்க ஜனாதிபதியா? இங்கிலாந்து ராணியா? இந்தியப் பிரதமரா? பூமியில் யாருடைய சக்தி என்றும் மாறாதது? நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே!
கிறிஸ்தவர்கள் சில சமயங்களில் சாத்தானை "இந்த பிரபஞ்சத்தின் தேவன்" என்று கருதுகிறார்கள் (2 கொரிந்தியர் 4:4). உலகம் சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இயங்குவதாக சிலர் நம்புகின்றனர்.
இது வாழ்க்கையைப் பற்றிய ஒரு அவிசுவாசமான கண்ணோட்டத்தை விளைவிக்கிறது. கிறிஸ்து சாத்தானை முற்றிலுமாகக் கைப்பற்றி அவனை நரகத்தில் தள்ளி, பூமியில் தனது ஆட்சியை நிறுவும் வரை, நம்பிக்கையுடன் நாம் கிறிஸ்துவிற்காகக் காத்திருக்க வேண்டும்.
சங்கீதம் 24 இந்த வசனத்துடன் தொடங்குகிறது:
“பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது."
நம் ஒவ்வொருவருக்காகவும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிறிஸ்து எப்படி பூமிக்கு வந்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஒரு நாட்டின் தேவன் மட்டுமல்ல, ஒரு இனத்தின் தேவன் மட்டுமல்ல - அவர் சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறார்.
No comments:
Post a Comment