பொருள்: என்னைக் காண்கிற தேவன்
சாராயின் எகிப்திய அடிமைப்பெண்ணாகிய ஆகார், இஸ்மவேலைப் பெற்றெடுத்த பிறகு தன்னைக் கடுமையாக நடத்திய தன் எஜமானியை விட்டு ஓடிவிட்டாள். அவநம்பிக்கையுடன், தனியாக வனாந்தரத்தில் அலைந்து திரிந்தாள். அப்பொழுது, கர்த்தருடைய தூதனானவர் அவள் முன் தோன்றி அவளுக்கு அறிவுறுத்தலையும் ஆறுதலையும் தந்தவுடன் அவள் தேவனுக்கு வைத்த பெயர்தான் "ஏல் ரோயி". (என்னைக் காண்கிற தேவன் - ஆதி 16:13)
கஷ்டமான நேரங்களில் நீங்கள் தனியாக இருப்பதாக ஒருபோதும் நினைக்காதீர்கள்.
"கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்."
நாகூம் 1:7
அடைக்கலான் குருவிகளைக்கூட கவனிக்கிற தேவன் நம்மைக் காணாமல் இருப்பாரா?
(மத் 10:29-31)
அவர் நம்மை ஆசீர்வதிப்பதற்கும் ஆறுதல்படுத்துவதற்கும் நம்மை இரவும் பகலும் தன் கண்மணியைப் போல பார்த்துக்கொள்கிறார்.
"நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்
வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும்!"
No comments:
Post a Comment