புடமிடுகிறவர்
Refiner
"அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார். அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர் பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார்."
மல்கியா 3:3
ஒரு பொற்கொள்ளரின் தீ, காட்டுத் தீயில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. காட்டுத்தீ எல்லாவற்றையும் முற்றிலுமாக அழித்துவிடும். தேவன் காட்டுத்தீயைப் போல இருக்கத் தேர்ந்தெடுத்திருந்தால், பரலோகத்திற்கு நிச்சயமாக நாம் ஒருவர் கூட போகமுடியாது. மிக அதிக வெப்பநிலையில் இருக்கும் புடமிடுபவரின் நெருப்பு, தனிமத்தை உருக்கி, அதன் மதிப்பைக் கெடுக்கும் அசுத்தங்களை அகற்றி, அதன் தரத்தை உயர்த்துகிறார்.
இந்த செயல்முறை தேவன் நம்மை நீதியின் பாதையில் நடக்க வைப்பதைப் போன்றது. இந்த சுத்திகரிப்பின் நெருப்பின் தாக்கத்தை நாம் அனுபவிக்க வேண்டியிருப்பதால் இந்த பாதை எளிதானது அல்ல. தேவனால் தூய்மைப்படுத்தப்படாத ஒருவராலும் அவருடைய நாளில் நிலைநிற்க முடியாது.
"ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்."
மல்கியா 3:2
மல்கியா புடமிடுகிறவனுடைய அக்கினியைப் பற்றி மட்டுமல்ல, ஒரு வண்ணாருடைய சவுக்காரத்தை (சலவை சோப்பு) பற்றியும் பேசுகிறது. கிறிஸ்து திரும்பி வரும்போது, அவர் உலகத்தை எல்லா அசுத்தங்களிலிருந்தும் சுத்தப்படுத்துவார். பாவத்தின் ஒவ்வொரு கறையும் வெண்மையாக கழுவப்படும்.
(ஏசாயா 1:18)
நம்முடைய வழியை சுத்தம் செய்ய தேவனுடைய வசனத்தின்படி நம்மைக் காத்துக்கொள்வோமாக!
"கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது."
சங்கீதம் 12:6
- ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew:
6884. tsaraph - to smelt, refine, test
2891. taher - to be clean or pure]
No comments:
Post a Comment