ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து தோன்றின துளிர்
Rod out of the stem of Jesse
"ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்."
ஏசாயா 11:1
சாமுவேல் தீர்க்கதரிசியின் மூலம் தேவன் தாவீதுக்கு அவருடைய சந்ததி ஒரு நித்திய ராஜ்யத்தை நிறுவும் என்று உறுதியளித்தார். (1 சாமு 16:12)
“அடிமரம்” என்பது ஒரு வெட்டப்பட்ட மரத்தின் மீதிப்பகுதியைக் குறிக்கிறது. பெரும்பாலும் அந்த மரம் இறந்துவிடும், மிக அரிதாக துளிர் விடும். தீர்க்கதரிசனத்தைப் போலவே, தாவீதின் வம்சத்தினர் பிற்காலத்தில் பிளவுபட்டு அசீரியா மற்றும் பாபிலோனுக்கு அடிமைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டனர். தேவன் அவருடைய வாக்குத்தத்தை மறந்துவிட்டதுபோல் தோன்றியது. ஒரு காலத்தில் பெரிய தேசமாக இருந்த இஸ்ரவேலில் எஞ்சியிருந்தது ஒரு அடிமரம் மட்டுமே. பட்ட மரம் போல் தோன்றின அந்த அடிமட்டும் வெட்டப்பட்ட அடிமரத்திலிருந்து மேசியா என்ற இயேசு கிறிஸ்து துளிராகத் தோன்றினார். இயேசு, ஒரு மனிதனாக, ஈசாயின் சந்ததியில் தோன்றினவர்; ஆனால் தேவனாக, அவரே ஈசாயை படைத்தவர்!
அதே வசனத்தில் இயேசு, ஈசாயின் "வேர்களில்" இருந்து எழும்பும் "கிளை" என்று குறிப்பிடப்படுகிறார். இன்று அசீரியர்களோ, பாபிலோன் ராஜ்யமோ பூமியில் இல்லை, ஆனால் இஸ்ரவேல் தேசம் இன்றும் செழித்தோங்குகிறது! அவரே தாவீதின் வேரும், சந்ததியுமானவர்!
"இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும், பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்."
ஏசாயா 4:2
நம் நம்பிக்கை யாவும் அற்றுப்போனாலும், எதிர்பாராதவிதத்தில் நமது வாழ்வில் தேவன் துளிர் தோன்றப் பண்ணுகிறவராகவே இருக்கிறார்.
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew:
2415. choter - branch or twig, a rod
1503. geza - a stock, stem
5342. netser - a sprout, shoot
8328. shoresh - a root]
No comments:
Post a Comment