சாரோனின் ரோஜா
Rose of Sharon
[Hebrew: ḥăḇaṣṣeleṯ ha-sharon]
"நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்."
உன்னதப்பாட்டு 2:1
இது இஸ்ரவேலின் மேற்குப் பகுதியில் ஹைஃபா மற்றும் ஜோப்பா இடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். சாலமோனின் காலத்தில், இது ஒரு வளமான சமவெளியாக இருந்தது. அதில் பல அழகான பூக்கள் இருந்தன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள "சாரோன் ரோஜா" (Chabatstseleth) வனாந்தரத்தில் முட்களுக்கு மத்தியில் காணப்படும் ஒரு மலர். முழு இடத்தையும் அழகாகவும் மணமாகவும் தோற்றமளிக்க வைக்கும். வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த தாவரத்தின் அடையாளம் தெளிவாக இல்லை. விவிலிய அறிஞர்கள் இது ஒரு ரோஜா அல்ல, ஆனால் ஒரு புல்வெளி குங்குமப்பூ அல்லது ஒரு வகை துலிப் அல்லது குரோக்கஸாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
ஆடுகளும், செம்மறி ஆடுகளும் புதர்கள் வழியாக அலைந்து திரியும்போது, இந்த மலர் அவற்றின் தோலில் சிக்கி, சில சமயங்களில் அவற்றின் உடம்பில் ஊடுருவி வெட்டுக்களையும் காயங்களையும் ஏற்படுத்தும். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகள் மேல் சிக்கியிருக்கும் இந்த பூக்களை எடுத்து, அவற்றின் காயங்களைக் குணப்படுத்தவும், தொற்றுநோயைத் தடுக்கவும் தங்கள் காயங்களிலும் இந்த மலரைக் கசக்கி தேய்த்துக் கொள்வார்களாம்.
இந்த மலரைப் போலவே, இயேசு பாலைவனம் போன்ற நம் வாழ்க்கையில் வரும்போது, அவர் அதை அழகாகவும் மணமாகவும் ஆக்குகிறார். அவருடைய இரத்தம் எல்லா பாவத்திலிருந்தும் நம்மை குணப்படுத்துகிறது. இன்னும் நம் வாழ்வில் தேவனிடம் அர்ப்பணிக்காத காரியங்கள் இருந்தால், இன்றே சரணடைவோம்! சாரோனின் ரோஜாவாகிய கிறிஸ்து நம்மை மேன்மைப்படுத்துவார்.
"வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்."
ஏசாயா 35:1
[Strong's Hebrew:
2261. chabatstseleth - meadow saffron or crocus
8289. Sharon - a plain on the Mediterranean Sea, perhaps also a region East of the Jordan]
No comments:
Post a Comment