பொருள்: "எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவன்"
எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிரிகளால் ஒடுக்கப்பட்டபோது தாவீது இந்த சங்கீதத்தை எழுதினார்:
"அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்."
சங்கீதம் 43:4
அவர் துன்பத்தின் மத்தியில் உண்மையான மகிழ்ச்சியாகிய தேவனைத் தேடுகிறார்.
மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை சுமையானது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். மகிழ்ச்சியைத் தேடி மனிதர்கள் எதை எதையோ இவ்வுலகில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவை எல்லாம் தற்காலிகமானவை, வரும் போகும்! (The world can only give temporary Happiness)
துன்பமும் துயரமும் தவிர்க்க முடியாதவை என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டாலும், யாரும் துயரத்தை அனுபவிக்கவோ அல்லது துன்பத்தை எதிர்கொள்ளவோ விரும்பவில்லை. நாம் சந்தோஷத்திற்காக ஒவ்வொரு நாளும் ஏங்குகிறோம்.
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி இந்த வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியைக் காண முடியும் என்று உறுதியளிக்கிறது. எல்லாப் பக்கங்களிலும் பிரச்சனைகள் அழுத்தும் போதும் மனதையும் இதயத்தையும் ஒளிரச் செய்யும் மகிழ்ச்சி - இயேசுவால் நமக்குக் கிடைத்த தேவனுடைய பிரசன்னம் மட்டுமே.
"என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்."
யோவான் 15:11
இந்த வசனத்தின் அடிப்படையில், கிறிஸ்துவின் மகிழ்ச்சி "நமக்குள்" இருக்க முடியும் என்பதை கவனியுங்கள். அது தற்காலிகமானது அல்ல, நிறந்தரமானது! (Joy of Christ comes from within)
"சந்தோஷம் பொங்குதே!
சந்தோஷம் பொங்குதே!
சந்தோஷம் என்னில் பொங்குதே!
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே...!"
No comments:
Post a Comment