பொருள்: பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன்
"பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக." - ரோமர் 15:6
ஒருவருக்கு பொறுமை இருக்கிறது என்று சொல்லும்போது, அவர்கள் பொறுமையிழந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தார்கள் என்று அர்த்தம். எந்த சூழ்நிலையிலும் தேவனை அவசரப்படுத்த முடியாது! தேவன் சரியான நேரத்தில் நேர்த்தியாய் எல்லாவற்றையும் செய்வார்.
"ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்..."
ஏசாயா 66:13
இந்த நாமத்தின் இரண்டாம் பகுதி தேவன் தனது ஜனத்திற்கு வழங்கும் ஆறுதலையும் தேற்றுதலையும் விளக்குகிறது. ஆறுதல் என்பது ஒரு பாரத்தை முற்றிலும் அகற்றுவதைக் குறிக்காது. நாம் தனிமையாக இல்லை, இந்த வலியைத் தாங்க நம்முடன் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை தருவதே ஆறுதல். "ஏல் தங்குமிம்" என்றால் ஆறுதலின் தேவன் என்று அர்த்தம்.
No comments:
Post a Comment