ஜீவஅப்பம் நானே
"ஜீவஅப்பம் நானே" என்பது இயேசுவின் ஏழு “நானே” அறிக்கைகளில் ஒன்றாகும். அவை அனைத்தும் யோவான் எழுதின சுவிசேஷத்தில் காணப்படுகின்றன.
சுவாரஸ்யமாக, இயேசுவின் பிறப்பிடம் பெத்லகேம் ஆகும். இது 'அப்பத்தின் வீடு' என்று அழைக்கப்படுகிறது.
அப்பம் இஸ்ரவேலின் பிரதான உணவாகும், மேலும் இஸ்ரவேல் நாட்டின் சிறந்த அப்பத்தை பெத்லகேம் உற்பத்தி செய்தது.
யோவான் 6:35 கூறுகிறது, “...ஜீவஅப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்."
திரளான ஜனக்கூட்டம் இயேசுவுக்குப் பின்னால் வந்தது அவருக்காக அல்ல, மாறாக அவர் அளித்த இலவச உணவுக்காக. இயேசு அவர்களைக் குற்றம் சாட்டி, பரலோகத்திலிருந்து வருகிற உண்மையான மன்னாவைத் தேடச் சொன்னார். நாம் தேடும் அப்பம் மண்ணிலிருந்து வருவதால், நம்மை கடைசியில் மண்ணில் சேர்த்துவிடும். இயேசு தரும் மெய்யான அப்பமோ, விண்ணிலிருந்து வருவதால், நம்மை
விண்ணுலகத்திற்கே கொண்டுபோய் சேர்க்கும்.
ஆத்துமாவுக்குத் தேவையான உணவை உண்பவதை விட, சரீரத்திற்கான உணவு உண்பதில் சில சமயங்களில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
இயேசு 'I am the cake of life' என்று சொல்லவில்லை, அதற்கு பதிலாக அவர் தினமும் சாப்பிடும் உணவைக் குறிப்பிட்டுள்ளார் (bread). தேவனுடைய வார்த்தையை தினமும் உண்ணவேண்டும். இது சிறப்பு சந்தர்ப்பங்களுக்கானது மட்டுமல்ல.
"அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்: அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்..."
யோவான் 6:27
No comments:
Post a Comment