ஏலோஹிம் ஷமா
Elohim Shama
பொருள்: (ஜெபத்தைக்) கேட்கும் தேவன்
"கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது..."
1 பேதுரு 3:12
தேவன் நம் ஜெபங்கள் உட்பட அனைத்தையும் கேட்கிறார். நாம் தினமும் ஜெபிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அவரை அனுபவிக்கவும், நம் பாவங்களை அறிக்கையிடவும், நம்முடைய தேவைகளை அவரிடம் கேட்கவும், அவருடைய சித்தத்துடன் நம் விருப்பங்களை சீரமைக்கவும் ஜெபம் உதவுகிறது. நம்மைப் போன்றவர்கள் படைப்பாளரிடம் பேசுவதும், அவர் நம்மைக் கேட்டு நமக்குப் பதிலளிப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம்!
நம் துயரத்தையும் வேதனையையும் யாரும் கவனிக்காதது போல் தோன்றினாலும், தேவன் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார். நம் மனதின் குமுரல்களைக்கூட கவனமாகக் கேட்டு, நம் கண்ணீரைத் துடைத்து நமக்காகச் செயல்படுவார். ஆகாரின் மகன் "இஷ்மவேல்" என்ற பெயருக்கு "தேவன் கேட்பார்" என்று பொருள், அன்னாளின் ஜெபத்தைக் கேட்டுப் பிறந்த "சாமுவேல்" என்ற பெயருக்கும் "தேவன் கேட்டார்" என்று அர்த்தம்.
தேவன் எல்லா ஜெபங்களைக் கேட்டாலும், அவர் ஒரு சில விண்ணப்பங்களுக்கு செவி சாய்ப்பதில்லை:
• நாம் பாவத்தில் வாழ தேர்ந்தெடுக்கும்போது. (எ.கா: பாவத்தில் வாழும் ஒருவரையோ அல்லது ஒரு தம்பதியையோ தேவன் ஆசீர்வதிக்கும்படி கேட்பது.)
• சுயநலமான ஆசைகளை நிறைவேற்றும்படி கேட்கும்போது. (எ.கா: தமையன் இருக்க தன் தகப்பனின் சொத்து தனக்கு மட்டுமே வேண்டும் என்று கேட்பது.)
• தேவ சித்தமில்லாத ஒன்றைக் கேட்கும்போது. (எ.கா: ஒரு வாலிபன் ஒரு புதிய வேலையைக் கேட்கிறான். ஆனால் தேவன் அவன் ஏற்கனவே வேலை செய்யும் இடத்தில் இருக்கவே விரும்புகிறார்.)
• விசுவாசமில்லாத ஜெபம் (எ.கா: ஜெபத்தில் பொருளாதார சுதந்திரத்தை கேட்பது, ஆனால் எப்போதும் கவலைப்பட்டு அதைப் பற்றி எதிர்மறையாக கருத்து தெரிவிப்பது.)
கிறிஸ்துவில் நிலைத்திருந்து அவருடைய வார்த்தையின் படி கேட்பதே உத்தமமான ஜெபம்.
"எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன், தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று."
சங்கீதம் 18:6
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew concordance:
8085. shama - to hear
8605. tephillah - prayer]
No comments:
Post a Comment